News November 2, 2025

இடிமின்னல் குறித்து மக்களுக்கு ஆட்சியர் அறிவுரை

image

2025 வட­கிழக்கு­ ப­ருவ மழைக்­கா­லங்களில் பொதுமக்­கள் எதிர்­பாராத இடி மின்­னல் போன்­ற­வற்றின் தாக்குதலில் இருந்­து­ பாதுகாத்துக்­ கொள்­ள­வும் விழிப்பு­டன் இருக்­க­வும் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவுரைகள் வழங்கியுள்ளார். இடி மின்­ன­லின் போது­ மக்­கள் வெளியே­ செல்­வ­தற்கு முன் வானி­லை எச்­ச­ரிக்­கை­களை­ கவனமு­டன் தெரிந்து­ கொள்­ள­ வேண்டும் எனவும், மேலும் பல அறிவுரைகள் அறிவித்துள்ளார்.

Similar News

News November 14, 2025

தொண்டி அருகே டியூசன் சென்ற சிறுமிகளிடம் அத்துமீறல்

image

தொண்டி அப்துல்மஜீத் 57. இவருடைய மருமகள் வீட்டில் டியூசன் நடத்தி வந்தார். அப்பகுதியை சேர்ந்த 9, 7 வயதுள்ள சகோதரிகளான இரு சிறுமிகள் டியூசன் படித்தனர். மருமகள் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அப்துல்மஜித் சிறுமிகளை சில்மிஷம் செய்தார். சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். இதை அறிந்த அப்துல்மஜித்வெளிநாட்டிற்கு சென்று விட்டார். திருவாடானை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்தனர்.

News November 13, 2025

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் (நவ.13) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

News November 13, 2025

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – இயக்குநர் ஆய்வு

image

ராமநாதபுரம், ராமேஸ்வரம் நகரில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நெடுஞ்சாலைத் துறை ஆராய்ச்சி நிலைய இயக்குநரும், ராமநாதபுரம் மாவட்ட வெள்ள நிவாரணப் பணி கணிப்பாய்வு அலுவலருமான சரவணன் இன்று ஆய்வு செய்தார். கோட்டப் பொறியாளர்கள் முருகன் (கட்டுமானம் & பராமரிப்பு) பிரசன்ன வெங்கடேசன் (தரக்கட்டுப்பாடு) நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

error: Content is protected !!