News March 28, 2024
ஆளுநர் நடுநிலையாக இருக்க வேண்டும்-இபிஎஸ்

சிவகாசியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஏற்பாட்டில் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று(மார்ச்.28) நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, “திமுக ஆட்சியில் முறைகேட்டை ஆதாரப்பூர்வமாக ஆளுநரிடம் அளித்தும் ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை, அவர் நடுநிலையோடு நடக்க வேண்டும்” என கூறினார்.
Similar News
News January 15, 2026
அருப்புக்கோட்டை: வைரலான வீடியோவால் போலீசார் அதிரடி

அருப்புக்கோட்டை ஸ்ரீசௌடாம்பிகா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் நேற்று பொங்கல் கொண்டாட்டத்தை முடித்து கல்லூரி முன்பு இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக சென்று பொது மக்களை அச்சுறுத்தினர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று டவுன் போலீசார் அந்த மாணவர்களை அழைத்து தக்க அறிவுரை வழங்கி இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து தலா ரூ.11,000 அபராதம் விதித்தனர்.
News January 15, 2026
JUST IN விருதுநகருக்கு வரும் உதயநிதி ஸ்டாலின்

அருப்புக்கோட்டை அருகே கல்குறிச்சி பகுதியில் தி.மு.க. தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு இன்னும் சரியான தேதி குறிப்பிடாத நிலையில் நாளை(ஜன.16) பாலமேடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். பின்னர் இந்நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஏற்பாடுகளை காலை 11 மணியளவில் பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News January 15, 2026
அருப்புக்கோட்டை: விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

அருப்புக்கோட்டை அருகே பாப்பாகுடியை சேர்ந்தவர் சரவணபாலன்(35). இவர் நேற்று(ஜன.14) பைக்கில் அருப்புக்கோட்டை புறவழிச்சாலை மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது கஞ்சநாயக்கன்பட்டி விலக்கில் சாலை நடுவே உள்ள பேரிகார்டில் பைக் மோதி சரவணபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


