News June 17, 2024

ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

image

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர்
சுர்ஜித். இவர் ஈரோட்டில் உள்ள தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று கார்த்திக் ராஜா, சுர்ஜித், அவரது நண்பர் சதீஷ் ஆகியோர் பவானி காவிரி ஆற்றில் சேலம் – கோவை பைபாஸ் பாலத்திற்கு அடியில் காவிரி ஆற்றின் மேற்புற கரை ஓரமாக குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது சுர்ஜித் திடீரென சுழலில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

Similar News

News January 16, 2026

ஈரோட்டில் 225 குழந்தை திருமணங்கள்: அதிர்ச்சி தகவல்!

image

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு 225 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. சட்டப்படி 18 வயதுக்கு கீழ் உள்ள பெண், 21 வயதுக்கு உட்பட்ட ஆண்களின் திருமணத்தை குழந்தை திருமணமாக கருத வேண்டும். பெண்ணுக்கு 18 வயதும், ஆணுக்கு 21க்கு மேல் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்ள முடியும். அவ்வாறு 225 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு 240 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News January 16, 2026

ஈரோட்டில் பெண்களுக்கு இலவசம்!

image

ஈரோடு, சித்தோடு கனரா வங்கி கிராமப்புற சுய வேலைய வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக ஜன.27 முதல் மார்.07 ஆம் தேதி வரை பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சி, சீருடை, உணவு, ஹாஸ்டல் வசதி அனைத்தும் இலவசமாகவும், பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படும் என பயிற்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் விபரங்களுக்கு 0424-2400338 என்ற எண்னை தொடர்பு கொள்ளவும். SHAREIT

News January 15, 2026

ஈரோடு: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

image

ஈரோடு மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!