News October 18, 2025
ஆற்றங்கரையோர மங்களுக்கு எச்சரிக்கை

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், வீடூர் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப் படுவதால், சங்கராபரணி ஆற்றங்கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பகுதிகளான மணலிப்பட்டு, செட்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு, கைக்கிலப்பட்டு, தேத்தாம்பாக்கம், நோணாங்குப்பம் ஆகிய கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Similar News
News November 12, 2025
புதுவை: ஹோட்டல் உரிமையாளருக்கு கத்தி வெட்டு!

வில்லியனுாரைச் சேர்ந்தவர் சத்யபிரகாஷ், அவரது வீட்டின் தரை தளத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சத்தியபிரகாஷ் மற்றும் ஓட்டலில் வேலை செய்யும் அமர்குமார் ஆகியோர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் கத்தியால் அமர்குமாரை வெட்டியுள்ளார். அதனையடுத்து சத்யபிரகாஷையும் வெட்டிவிட்டு, கொலை மிரட்டல் விடுத்து தப்பிச்சென்றதாக வில்லியனூர் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
News November 12, 2025
புதுவை: சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் சிறை

காரைக்கால் மாவட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் இருசக்கர வாகனம் ஓட்டுவது குற்றமாகும். அதனை மீறி சிறார்கள் வாகனம் ஓட்டினால் அவர்களது பெற்றோர் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு ரூ.25,000 அபராதம் மற்றும் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று காரைக்கால் மாவட்டம் போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
News November 12, 2025
காரைக்காலில் குறைதீர்ப்பு முகாம் அறிவிப்பு!

காரைக்கால் மாவட்ட ஆட்சியரின் செயலர் பொன் பாஸ்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரி ஆளுநர் அறிவுறுத்தலின்படி பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் காரைக்கால் மாவட்டத்தில் வரும் 17.11.2025 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில், அனைத்துத்துறை அதிகாரிகள் முன்னிலையில், ஆட்சியர் வளாகத்தில் காலை 09:30 மணி முதல் பிற்பகல் 12:00 மணி வரை நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


