News August 19, 2024
ஆற்காடு சுரேஷின் மனைவிக்கு நீதிமன்ற காவல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை கைது செய்த செம்பியம் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆந்திராவில் பதுங்கியிருந்த பொற்கொடியை கைது செய்ததையடுத்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவரை காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து பொற்கொடியை செப்டம்பர் 2-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News January 14, 2026
மெட்ரோ பயணிகள் கவனத்திற்கு…

சென்னை மெட்ரோ ரயில் சேவை நாளை (15.01.2026) மற்றும் ஜன.16, 17 தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை சேவை தொடரும். காலை 5–12 மணி மற்றும் இரவு 8–10 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும், மதியம் 12–இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும், இரவு 10–11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படும். ஷேர் பண்ணுங்க
News January 14, 2026
சென்னை: ஹாஸ்ப்பிடலில் சிகிச்சை சரியில்லையா?

சென்னை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் அல்லது உங்க மாவட்ட சுகாதார அலுவலகத்தில் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News January 14, 2026
சென்னை: கூவம் ஆற்றில் குதித்த இளம்பெண் சடலமாக மீட்பு!

சென்னை அண்ணா சதுக்கம், நேப்பியர் பாலத்தில் இருந்து நேற்று இளம்பெண் ஒருவர் திடீரென கூவம் ஆற்றில் குதித்தார். அவ்வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணையில் யுவஶ்ரீ (25) என்பது தெரியவந்தது. இந்த நிலையில் பெண்ணின் உடல் இன்று கரையொதுங்கியது. மேலும், உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


