News May 13, 2024

ஆரணி: மாணவன் பலியான சோகம்

image

ஆரணி அடுத்த ஆதனூர் கிராமத்தில் வசிப்பவர் பிரவீன் குமார். இவர் தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இவர் நேற்று மாலை தனது நண்பர்களுடன் அருகில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார். அப்போது தண்ணீரில் மூச்சு திணறல் ஏற்பட்டு துடித்தார். இதனைக் கண்ட நண்பர்கள் இவரை மீட்டு ஆரணி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பலியானார். ஆரணி தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Similar News

News December 9, 2025

தி.மலை: டிகிரி போதும், ரூ.85,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

மத்திய அரசின் கீழ் செயல்படும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பணிக்கு 300 காலிப்பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளமாக ரூ.50,925 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படும். 21-30 வயதுள்ளவர்கள் டிச.15ஆம் தேதிக்குள் இந்த <>லிங்க்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News December 9, 2025

தி.மலை மக்களே 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

image

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். ஷேர் பண்ணுங்க.

News December 9, 2025

தி.மலை மக்களே லஞ்சம் கேட்டால் உடனே CALL!

image

தி.மலை மக்களே வருமானம், சாதி, குடிமை, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் &அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (004172-299200) புகாரளிக்கலாம். இன்று உலக ஊழல் எதிர்ப்பு தினம் என்பதால் தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!