News August 5, 2024

ஆம்ஸ்ட்ராங் வழக்கு: 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பொன்னை பாலு, ராமு, அருள், ஹரிதரன், சிவசக்தி ஆகிய 5 பேரை, 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனால், பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்களை, போலீசார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ஆம் தேதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News January 24, 2026

திருவள்ளூரில் கழுத்தை அறுத்த காதலன்!

image

விருதுநகரைச் சேர்ந்தவர் தங்க மாரியப்பன்(38). இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இவருக்கும் திருநின்றவூர் பகுதியில் உள்ள ஓர் பெண்ணிற்கும் திருமணம் மீறிய உறவு இருந்துள்ளது. இந்நிலையில், அப்பெண் வேறு பல ஆண்களுடன் செல்போனில் பேசியதால் ஆத்திரமடைந்த மாரியப்பன், அவரின் கழுத்தை அறுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அப்பெண், தாயை சிகிச்சைக்கு அனுமதித்து, மாரியப்பனை கைது செய்தனர்.

News January 24, 2026

திருவேற்காடு: மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

image

ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் 37-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு (23.01.2026) திருவேற்காடு சிந்தி கல்லூரியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் சாலை விதிகள் மற்றும் விபத்தில்லா பயணம் குறித்து மாணவர்களுக்கும், பட்டாபிராம், எண்ணூர் தொழிற்சாலை பணியாளர்களுக்கும் எடுத்துரைக்கப்பட்டது.

News January 24, 2026

திருவள்ளூரில் இது நாம் ஆட்டம் 2026

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இது நாம் ஆட்டம் 2026 முதலமைச்சர் இளைஞர் அணி விளையாட்டு திருவிழா நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகள் குறித்த விவரங்கள் இன்று வெளியிட்டுள்ளது. மேலும் முன்பதிவு செய்ய க்யூ ஆர் ஸ்கேன் செய்து பார்த்து கொள்ளாமல் என் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விவரங்கள் மேல் உள்ள புகைப்படத்தில் உள்ளது.

error: Content is protected !!