News November 19, 2024

ஆபாசப்படம் வெளியிட்ட கணவன்: கைது செய்ய கோரி தர்ணா

image

மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக வெளியிட்ட கணவரை கைது செய்ய வலியுறுத்தி, பல்லாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை நேற்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், பல்லாவரம் உதவி ஆணையர் வெங்கட் குமார், மாதர் சங்கத்திடம் பேச்சுவார்த்தையிட்டு ஈடுபட்டு, ஓரிரு தினங்களில் குற்றவாளி கைது செய்யப்படுவார் என உறுதி அளித்ததையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Similar News

News December 16, 2025

செங்கல்பட்டு: பைக்கில் சென்ற நபர்களுக்கு எமனாக ஆனா மாடுகள்

image

திருப்போரூர் அடுத்த வேலங்காடு கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் நேற்று முன்தினம் மாலை சுமார் 6 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சிறுதாவூர் சாலையில் படுத்திருந்த மாடுகள் திடீரென எழுந்து ஓடியதால், எதிர்பாராத விதமாக மாட்டின் மீது மோதி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

News December 16, 2025

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு இன்று (டிச.15) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 16, 2025

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு இன்று (டிச.15) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!