News December 14, 2025
ஆபத்தாக நிற்கும் மரத்தை அகற்ற கோரிக்கை

ஆற்றூர் பகுதி கிறிஸ்தவ ஆலயம் முன் சாலையோரம் மாமரம், புளியமரம் என 2 மரங்களின் வேர் பகுதி சேதமடைந்து ஓட்டை விழுந்த நிலையிலும், மண்ணின் பிடிப்பற்ற நிலையிலும் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் காற்றின் வேகத்தில் இந்த மரங்கள் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News January 25, 2026
குமரி: புது மாப்பிள்ளை திடீர் பலி

திருப்புவனத்தை சேர்ந்த தம்பதியர் சதீஷ்குமார், கிரேசிக்கு 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இருவரும் விருந்திற்காக கட்டையன்விளை பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். அங்கு சதீஷ்குமார் மோட்டார் அறையில் குடிபோதையில் மயங்கி கிடந்தார். உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து நேசமணிநகர் போலீசார் வழக்குப்பதிவு.
News January 25, 2026
குமரி: NO EXAM.. NAVY-ல் ரூ.1,25,000 சம்பளத்தில் வேலை

இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள 260 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியது. B.E/B.Tech, B.Sc, B.Com படித்தவர்கள், திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் பிப். 24க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.1,25,000 வழங்கப்படும். தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News January 25, 2026
குமரி: சிறுமி பாலியல் வழக்கில் டிரைவருக்கு தண்டனை

விருதுநகரை சேர்ந்தவர் ராமர் (42). டிரைவரான இவர் குமரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு இவரது வீட்டின் அருகில் இருந்த 17 வயது சிறுமியை திருமண ஆசை காட்டி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து குமரி அனைத்து மகளிர் போலீசார் பதிவு செய்த இந்த வழக்கை விசாரித்த நாகர்கோவில் போக்சோ நீதிமன்றம் நேற்று ராமருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.


