News November 3, 2025
ஆனந்த கண்ணீரில் ரோஹித் சர்மா

மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியை ஹிட்மேன் ரோஹித் சர்மா நேரில் கண்டுகளித்தார். தென்னாப்பிரிக்க அணியின் இறுதி விக்கெட் விழுந்ததும் ரோஹித் சர்மா எழுந்து நின்று கைத்தட்டி வீராங்கனைகளை உற்சாகப்படுத்தியதோடு மட்டுமின்றி, அவர்களின் மகிழ்ச்சியான தருணங்களை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்தார். 2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ரோஹித் தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியா அணியிடம் தோற்றிருந்தது.
Similar News
News November 17, 2025
SIR பணியில் இருந்த BLO தற்கொலை: வேலை அழுத்தமா?

கேரளாவின் கன்னூர் மாவட்டத்தில் SIR பணியில் இருந்த BLO அனீஷ் ஜார்ஜ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். SIR பணி அழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் அரசு ஊழியர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், 3 முக்கிய அமைப்புகள் BLO பணியை புறக்கணித்து இன்று போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
News November 17, 2025
சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரெயில்கள்

சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக 7 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, ஆந்திர மாநிலம் காக்கிநாடா, மச்சிலிப்பட்டினம், நரசாப்பூரில் இருந்து தமிழகம் வழியாக கேரளாவுக்கு 4 ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல் தெலங்கானாவின் சார்லபள்ளியில் இருந்தும் அடுத்த 2 மாதங்களுக்கு 3 சிறப்பு ரயில்கள் தமிழகம் வழியாக இயக்கப்படுகின்றன.
News November 17, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சுற்றந்தழால் ▶குறள் எண்: 522
▶குறள்:
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்.
▶பொருள்: எந்த நிலைமையிலும் அன்பு குறையாத சுற்றம் ஒருவருக்குக் கிடைத்தால் அது அவருக்கு ஆக்கமும், வளர்ச்சியும் அளிக்கக் கூடியதாக அமையும்.


