News November 26, 2025
ஆண்டிப்பட்டி: ஆட்டோ மோதி ஒருவர் பலி!

ஆண்டிப்பட்டி, மொட்டனூத்து கிராமத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (44) வேலைக்கு சென்றுவிட்டு டுவீலரில் கன்னியப்பிள்ளைபட்டியில் இருந்து வீட்டிற்கு திரும்பினார். அப்போது எதிரே வந்த ஆட்டோ மோதியதில் தூக்கி வீசப்பட்டார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ராஜதானி போலீஸ் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் சத்தியசீலனை கைது செய்தனர்.
Similar News
News January 15, 2026
தேனி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE IT
News January 15, 2026
தேனி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

தேனி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 15, 2026
போடியில் பெண்ணுக்கு கொலை மிரட்டல்

போடிநாயக்கனூர் எஸ்.எஸ்.புரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெகன். இவரது மனைவி பிரேமா. ஜெகனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியை அடித்துத் துன்புறுத்தியுள்ளார். இந்த நிலையில், ஜன.12 அனறு மனைவியைத் கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்த்துள்ளார். இதுகுறித்து பிரேமா அளித்த புகாரின் பேரில் போடி நகா் காவல் நிலைய போலீசார் ஜெகனை நேற்று கைது செய்தனா்.


