News November 14, 2025

ஆணவக்கொலைகளுக்கு தனிச்சட்டம் இயற்ற ஆணையம்

image

சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ஆணவக்கொலைகளை தடுக்க தேவையான பரிந்துரைகளை வழங்க ஆணையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷாவை தலைவராகக் கொண்ட ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இக்குழுவில் ஓய்வுபெற்ற IAS அதிகாரி V.பழனிக்குமார், S.ராமநாதன் (IPS) ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். இக்குழு, 3 மாதங்களில் பரிந்துரைகளை வழங்கும்.

Similar News

News December 12, 2025

தஞ்சாவூர்: டிராக்டர் வாங்க மானியம் வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘பிரதம மந்திரி கிசான் டிராக்டர் யோஜனா’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க 50% மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு பொருளாதார ரீதியாக நலிவடைந்த 18-60 வயதுடைய விவசாயிகள் மாவட்ட வேளாண் துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் டிராக்டர் வாங்க வங்கிக் கடனும் வழங்கப்படுகிறது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

News December 12, 2025

BREAKING: தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு!

image

தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை இன்று(டிச.12) புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ₹1,600 உயர்ந்து ₹98,000-க்கும், 1 கிராம் தங்கத்தின் விலை ₹200 அதிகரித்து ₹12,250-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு சவரனுக்கு ₹160 மட்டுமே உயர்ந்திருந்த நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ₹1,600 உயர்ந்துள்ளது நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

News December 12, 2025

திரையுலகில் முத்திரை பதித்த ரஜினி: PM மோடி

image

நடிப்பாற்றலால் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளதாக குறிப்பிட்டு, நடிகர் ரஜினிக்கு PM மோடி தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ரஜினியின் திரையுலகப் படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி, தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார். திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது, இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சம் எனவும் மோடி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!