News October 17, 2025

ஆட்சியர் சதீஸ் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் தருமபுரி மாவட்டத்தில் பாலின விகிதாச்சாரம் குறித்து அனைத்து மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சதீஸ், தலைமையில் நேற்று அக்.16 நடைபெற்றது. உடன் இணை இயக்குநர் (நலப்பணிகள்)சாந்தி, மாவட்ட சுகாதார அலுவலர் ராஜேந்திரன், துணை இயக்குநர் (குடும்பநலம்) பாரதி, மற்றும் முக்கிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News November 12, 2025

தருமபுரி: அதிரடி காட்டிய வனச்சரக அலுவலர்!

image

மொரப்பூர் வனச்சரக அலுவலர் அருண்பிரசாத்துக்கு கிடைத்த தகவலின் படி, வன அலுவலர்கள் நேற்று காலை செல்லம்பட்டி பீட் காவல் எல்லைக்குட்பட்ட வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, பொய்யப்பட்டியை சேர்ந்த சந்திரன் (62) சந்திரகாந்த் (42) ஆகியோர் அவர்களது நிலத்தில், மின்சாரம் பாய்ச்சி, வனவிலங்குகளை வேட்டையாட முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து, இருவருக்கும் தலா ரூ.1.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

News November 12, 2025

இந்த எக்ஸ்பிரஸ் ரயில் மொரப்பூரில் நிற்கும்!

image

சென்னை, எம்ஜிஆர் சென்ட்ரல்-திருவனந்தபுரம் இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில் (12695, 12696) மொரப்பூரில் நின்று செல்ல பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில், தம்பிதுரை எம்பி மத்திய ரயில்வே அமைச்சருக்கு பரிந்துரை செய்ததன் பேரில், இனி மொரப்பூர் ஸ்டேஷனில் நின்று செல்வதற்கு மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார்.

News November 12, 2025

தருமபுரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்.

error: Content is protected !!