News October 14, 2024

ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்ற குறைதீர் கூட்டம்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும். அதன்படி, இன்று(14/10/2024) குறைதீர்க்கூட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான மக்கள் மனுக்களை அளித்தனர். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் சித் சிங் காலோன் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். மேலும், அந்தந்த துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மக்களுக்கு உறுதி அளித்தார் .

Similar News

News July 10, 2025

11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

image

ராமநாதபுரத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த மணிகண்டனை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், பின்னர் ஜாமினில் விடுவித்தனர். இந்த வழக்கு ராமநாதபுரம் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று (ஜூலை.09), வழக்கை விசாரித்த நீதிபதி கவிதா, மணிகண்டனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆர்.எம்.கீதா ஆஜரானார்.

News July 9, 2025

ராமநாதபுரம்: இரவு ரோந்துப் பணி அதிகாரிகளின் விவரம்

image

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் ஜூலை 9, 2025 அன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கமுதி, பரமக்குடி, ராமேஸ்வரம், முதுகுளத்தூர் உட்கோட்டங்களில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு வெளியிடப்பட்ட புகைப்படத்தில் குறிப்பிடப்பட்ட தொலைபேசி எண்களைத் தொடர்புகொண்டு உதவி பெறலாம்.

News July 9, 2025

திருமணத்தடை, குழந்தை பாக்கியம் தரும் விநாயகர்

image

ராமநாதபுரம் மாவட்டம், உப்பூரில் அமைந்துள்ள வெயிலுகந்த விநாயகர் கோயிலில், தட்சிணாயனத்தில் தெற்கிலிருந்தும், உத்தராயனத்தில் வடக்கிலிருந்தும் மூலவர் விநாயகர் மீது சூரிய வெளிச்சம் படுகிறது. பக்தர்கள் அபிஷேகம், வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். திருமண தடை நீங்குதல், குழந்தை பாக்கியம், கல்வியில் சிறப்பு ஆகியவை இங்கு பிரார்த்தனை செய்தால் கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர். *SHARE IT*

error: Content is protected !!