News May 3, 2024
ஆசிரியர் குடும்பத்திற்கு உதவிய ஒய்வு IAS அதிகாரி

ஓய்வுபெற்ற IAS அதிகாரி பாலசந்திரன் 60 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கலில் 7, 8 வகுப்பு படித்தபோது ராமசாமி என்ற தமிழ் ஆசிரியர் பாடம் எடுத்துள்ளார். ஆசிரியர் 7 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், அவரது குடும்பம் வறுமையில் இருப்பதை அறிந்த பாலச்சந்திரன், நேமம் கிராமத்தில் உள்ள ஆசிரியர் மனைவிக்கு மருத்துவ வசதி ஏற்படுத்தியும், பேரனுக்கு மாடு வாங்க ரூ.45,000பணம் கொடுத்து உதவியுள்ளார்.
Similar News
News November 7, 2025
தெரு நாய் கடித்து 50 நாட்டுகோழிகள் உயிரிப்பு

கும்பகோணம் விவேகானந்தர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் இவரது வீட்டின் தோட்டத்தில் நாட்டுக்கோழிகளை வளர்த்த நிலையில், நேற்று இரவு இவரது வீட்டின் தோட்டத்திற்கு புகுந்த தெரு நாய்கள் அங்கிருந்த நாட்டுக் கோழிகளைக் கடித்து குதறின. இதில் 50க்கும் மேற்பட்ட நாட்டுக் கோழிகள் உயிரிழந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் இறந்த கோழிகளை கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகர்களிடம் காண்பித்து வேதனை அடைந்தார்
News November 7, 2025
தஞ்சை: வங்கி கணக்கை பாதுகாக்க இது முக்கியம்

உங்க வங்கி மறு KYC தேவை என உங்களுக்கு அறிவித்ததா? அப்போ, உங்கள் வங்கி கணக்கு முடங்காமல், செயல்பாட்டில் வைத்திருக்க உங்கள் KYC-ஐ புதுப்பிக்கவும்.
KYC எப்படி புதுப்பிப்பது:
*உங்கள் அருகிலுள்ள வங்கி கிளைக்கோ / கிராம பஞ்சாயத்து முகாமிற்கோ செல்லவும்.
*ஆதார், வோட்டர் ஐடி, 100நாள் வேலை அட்டை கொண்டு செல்லவும்.
*விவரங்களில் எந்தவிதமான மாற்றமும் இல்லையெனில் சுய அறிக்கை (Self-declaration) போதும். SHARE IT
News November 7, 2025
தஞ்சை: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த ஆய்வு கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருமான ப்ரியங்கா பங்கஜம் தலைமையில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கெடுப்பு பணிகள் தொடர்பாக வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்களுடன் ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் வருவாய் கோட்டாட்சியர் நித்யா, வட்டாட்சியர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


