News August 4, 2024
ஆகஸ்ட் 14ஆம் தேதி மதிமுக போராட்டம்

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மாவட்டத் தலைநகரங்களில் வரும் 14ஆம் தேதி மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டி அளித்த அவர், தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு கோடி கோடியாக அள்ளித் தருகிறது எனக் குற்றம்சாட்டினார்.
Similar News
News January 13, 2026
சென்னை: அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இதனை ஷேர் பண்ணுங்க மக்களே.
News January 13, 2026
ஆம்னி பேருந்து குறித்து புகார் அளிக்கலாம்!

சென்னை பொங்கலை ஒட்டி ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தல் மக்கள் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகத்தின் 1800 425 6151 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். தொலைபேசி மூலமாகவோ, வாட்ஸ் ஆப் மூலம் குறுந்செய்தி அல்லது குரல் பதிவாகவோ மக்கள் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News January 13, 2026
சென்னை: ரவுடி கொலை… 4 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்

சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனை வளாகத்தில் உறங்கிக் கொண்டிருந்த ரவுடி ஆதியை மர்மநபர்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவத்தின் போது பணியில் இருந்த மூன்று பெண் காவலர்கள் மற்றும் ஒரு ஆண்காவலர் என மொத்தம் நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


