News August 19, 2024

அஸ்வத்தாமன் பரபரப்பு வாக்குமூலம்

image

3 விஷயங்களில் மன உளைச்சலுக்கு ஆளானதால் தான் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சம்மதம் தெரிவித்தாக அஸ்வத்தாமன் வாக்குமூலம் அளித்துள்ளார். “ஒரக்காடு நிலப்பிரச்சனையில் என்னை உள்ளே நுழைய விடாமல் செய்தது, மீஞ்சூரில் காங்கிரஸ் பிரமுகர் ஜெயப்பிரகாஷை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய வழக்கில் என் மீது புகார் அளித்தது, BSP மாவட்டச் செயலாளர் தென்னரசு கொலை வழக்கில் என் தந்தை நாகேந்திரனை குற்றவாளியாக சேர்த்தது” என்றார்.

Similar News

News January 20, 2026

திருவள்ளூர்: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!

image

திருவள்ளூர் மக்களே.., உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீம யோஜனா’ திட்டம் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். இதற்கு யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை <>இங்கே <<>>கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யுங்கள். அந்த படிவத்தை பூர்த்தி செய்து, வங்கி மேலாளரிடம் கொடுத்தால் போதும். உடனே அனைவருக்கும் SHARE!

News January 20, 2026

ஆவடி அருகே பரிதாப பலி!

image

திருவள்ளூர்: ஆவடி, கவரப்பாளையம், கங்கை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கேசவன்(72). இவர், ஆவடியில் கைக்கடிகாரம் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இந்நிலையில், நேற்று(ஜன.19) காலை தனது பைக்கில் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, சி.டி.எச் சாலையில், பின்னால் வந்த பைக் மோதியதில் தூக்கி வீசப்பட்டு, அந்த வழியாக சென்ற லாரியின் பின் பகுதியில் மோதி உயிரிழந்தார்.

News January 20, 2026

திருவள்ளூர்: குடிக்க வெந்நீர் தராததால் தற்கொலை!

image

ஆவடி அடுத்த திருநின்றவூர், சுதேசி நகர், பவானியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நாராயணன்(46). கட்டடத் தொழிலாளியான இவர் மனைவி பவித்ரா(38), மகன் சபரிவாசன்(16) ஆகியோருடன் வாழ்ந்து வந்தார். வெரிகோஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று மனைவியிடம் குடிப்பதற்கு வெந்நீர் கேட்டுள்ளார். அதை அவர் தர மறுத்ததால் ஆத்திரமடைந்து, பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

error: Content is protected !!