News January 14, 2025
அரிவாள் கத்தியுடன் ரீல்ஸ் – எஸ்.பி எச்சரிக்கை

கோரம்பள்ளத்தில் உள்ள எஸ்.பி அலுவலகத்தில் நேற்று (ஜன.13) செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்; மாவட்டத்தில் அரிவாள் கத்தியுடன் நிற்பது போன்று ரீல்ஸ் எடுத்து வெளியிட்ட சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்தும் இவ்வாறு ரீல்ஸ் வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Similar News
News November 12, 2025
பொட்டலூரணியில் 548-வது நாளாக தொடரும் போராட்டம்..

பொட்டலூரணியை சுற்றியுள்ள மூன்று தனியார் கழிவு மீன் ஆலைகளை உடனடியாக மூடக்கோரியும் பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெறக்கோரியும் இன்று (12.11.2025) தொடர் போராட்டத்தின் 548-ஆம் நாள் கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது..
தமிழக அரசும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொட்டலூரணி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்..
News November 12, 2025
BREAKING தூத்துக்குடி: 11 மாத குழந்தை பலி

தூத்துக்குடி சின்னக்கண்ணுபுரத்தில் உள்ள செல்வநாயகபுரத்தை சேர்ந்தவர்கள் ஆனந்த் ராதா & மகேஸ்வரி தம்பதிகள். இன்று இவர்களது வீட்டின் மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் வீட்டிலிருந்த இவர்களின் 11 மாத பெண் குழந்தை பலியானார். தாய் ராதா மகேஸ்வரி பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது பற்றி சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 12, 2025
தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு

தொடக்க கல்வி துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பாக செயல்படும் 3 பள்ளிகளுக்கு மாவட்ட வாரியாக அரசு பரிசுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தூத்துக்குடி மாவட்ட சிறந்த பள்ளியாக தூத்துக்குடி சாமுவேல்புரம் மாநகராட்சி பள்ளி, டுவிபுரம் திருமண்டல நடுநிலைப்பள்ளி, திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.


