News August 22, 2025

அரியலூர்: 3-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

தா.பழூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் ரவி (45). கொத்தனாரான இவர், அதே பகுதியில் 3-ம் வகுப்பு பயிலும் சிறுமி ஒருவரை பள்ளியில் இருந்து அவரது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார். தனக்கு நேர்ந்து கொடுமை குறித்த சிறுமி தனது தாயாரிடம் தெரிவிக்கவே, அவர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து போலீசார் ரவியை போக்சோவில் கைது செய்தனர்.

Similar News

News January 21, 2026

அரியலூர்: சிறப்பு பயிற்சி முகாம் அறிவிப்பு

image

அரியலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில், பிரதான் மந்திரி தேசிய தொழில் பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம், அப்ரண்டிஸ் மேளா இன்று நடைபெறுகிறது. இதில் அரசு ஐடிஐ மற்றும் தனியார் ஐடிஐ-யில் படித்த இளைஞர்களுக்கு பல முன்னணி நிறுவனங்களில், அப்ரெண்டிஸ்ஷிப் பயிற்சியில் சேர்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். எனவே, இளைஞர்கள் கலந்து கொள்ளுமாறு திறன் பயிற்சி உதவி இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News January 21, 2026

அரியலூர்: குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

image

தஞ்சாவூர், காருகுடியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் வழிப்பறி மற்றும் கஞ்சா வழக்குகள் உள்ளிட்ட, பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவராவார். இவர் டிச.16-ம் தேதி அரியலூர் மாவட்டம், திருமானூரைச் சேர்ந்த நபரை தாக்கி, அவரிடம் இருந்து தங்க செயின், கைக்கடிகாரம், பணம் ஆகியவற்றை பறித்து சென்ற வழக்கில் கீழப்பழுவூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர் மீது தற்போது குண்டர் சட்டமும் போடப்பட்டுள்ளது.

News January 21, 2026

அரியலூர்: ரோந்து செல்லும் காவலர் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.20) இரவு 10 முதல் இன்று (ஜன.21) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!