News November 2, 2025

அரியலூர்: 1000 ஆண்டு பழமையான கோயில்

image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையவர் தீயனூர் கிராமத்தில் அமைந்துள்ள ஜமதக்னீஸ்வரர் கோயில், இரண்டாம் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட 1000 ஆண்டுகள் பழமையான கோயிலாகும். மேலும், இக்கோயில் சப்த ரிஷிகளில் ஒருவரான ஜமதக்னி முனிவர் தவம் செய்த இடமாக கருதப்படுகிறது. இக்கோயிலில் வழிபாடு செய்தால் வயிற்றுவலி, கண் நோய் போன்ற பல்வேறு நோய்களிலிருந்து விடுபடலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. SHARE IT.

Similar News

News November 7, 2025

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்களின் விபரம்

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.6) இரவு 10 மணி முதல் இன்று (நவ.7) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News November 6, 2025

அரியலூர்: நூலகத்தினை ஆய்வு செய்த எம்எல்ஏ

image

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் புதிதாக கட்டப்பட்ட திறக்கப்பட்ட கிளை நூலக கட்டிடத்தினை, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அதில் பயின்று வரும் மாணவ மாணவிகளிடம் நூலகம் குறித்து கேட்டறிந்தார். மேலும் நூலகத்திற்கு புத்தகங்களை வழங்கினார். இதில் நூலக அலுவலர் சௌந்தர்ராஜன் மற்றும் மாணவர்கள் வாசிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

News November 6, 2025

அரியலூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

image

அரியலூர் மாவட்ட மக்களே உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!