News October 9, 2025

அரியலூர் மக்களே இது முற்றிலும் இலவசம்!

image

அரியலூர் மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள், பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் செய்யவும்<<>> அல்லது உங்கள் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பதிவு செய்து பயன் பெறலாம். SHARE பண்ணுங்க!

Similar News

News November 15, 2025

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்

image

அரியலூர் மாவட்டத்தில் இன்று (நவ.14) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News November 14, 2025

அரியலூர்: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

image

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். இதனை ஷேர் பண்ணுங்க!

News November 14, 2025

அரியலூர் தொழில்நுட்ப பணிகள் II-க்கான தேர்வு

image

அரியலூர் மாவட்டத்தில் அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் II-க்கான தேர்வு வரும் (நவ – 16) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை மற்றும் பிற்பகல் 02.30 மணி முதல் 05.30 வரை அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரிகளில் நடைபெறுகிறது. தேர்வு எழுதவரும் தேர்வர்கள் அனைவரும் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட சரியான நேரத்தில் வர ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!