News December 16, 2025
அரியலூர்: பாலியல் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

அரியலூர் மாவட்டத்தில், கடந்த 2022 ஆம் ஆண்டு இராயம்புரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், தனது குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே சென்று, அந்த பெண்மணியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த வழக்கில் அரியலூர் மகளிர் நீதிமன்றம் இன்று குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
Similar News
News January 25, 2026
அரியலூர்: விளையாட்டு திருவிழா இன்று தொடக்கம்

முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா “இது நம்ம ஆட்டம் 2026” விளையாட்டுப் போட்டிகள் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இன்று நடைபெற உள்ளது. இன்று காலை 10.15 மணியளவில், அரியலூர் ஒன்றிய அளவில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், வாலிபால், கேரம் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
News January 25, 2026
அரியலூர்: 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு

விக்கிரமங்கலம் அருகே முத்துவாஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மயில் ராவணன் ( 34). இவரை அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (30) என்பவர், முன்விரோதம் காரணமாக தனது நண்பர்களுடன் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், சம்பத்தில் ஈடுபட்ட சுரேஷ், சதீஷ், அஜித் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
News January 25, 2026
அரியலூர் மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள இலந்தைக்கூடம், ஓலையூர் ஆகிய துணை மின் நிலையங்களில் வருகிற 27ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் ஆலம்பாக்கம், அன்னிமங்கலம், வெங்கனூர், பெரியாத்துக்குறிச்சி, விழுதுடையான் உள்ளிட்ட பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!


