News November 19, 2025
அரியலூர்: பணியில் இருந்த போலீசார் உயிரிழப்பு!

அரியலூரைச் சேர்ந்த ஜெகதீசன் (55) என்பவர், பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றப் புலனாய்வுத்துறை தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர். நேற்று மாலை ஜெகதீசன் பணியில் இருந்தபோது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள், அவரை உடனடியாக வாகனத்தில் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்ற நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Similar News
News January 13, 2026
அரியலூர்: உங்கள் தொகுதி MLA நம்பர் தெரியுமா?

அரியலூர் மாவட்டத்தில் மொத்தமாக 3 சட்டமன்ற தொகுதிகள் அமைந்துள்ளன. இந்நிலையில் அச்சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அத்தொகுதி எம்.எல்.ஏ-க்களின் தொடர்பு எண்களை அறிந்து கொள்வோம். 1.அரியலூர் – கு.சின்னப்பா (96263 63666), 2.குன்னம்- எஸ்.எஸ்.சிவசங்கர் (94431 42600), 3.ஜெயங்கொண்டம் – கண்ணன். க.சொ. க (98431 50699). இதை மறக்காமல் SHARE செய்யவும்.
News January 12, 2026
பொங்கல் விழா கொண்டாடிய பாஜகவினர்

அரியலூர் மாவட்டம் கடம்பூர் கிராமத்தில் இன்று பொங்கல் விழாவை முன்னிட்டு, பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஒன்றிய தலைவர் அருண் ஏற்பாட்டில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் பரமேஸ்வரி ஆனந்த்ராஜு, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
News January 12, 2026
அரியலூரில் உள்ள மிகப்பெரிய யானை சுதை சிற்பம்!

அரியலூர் மாவட்டம், சலுப்பை கிராமத்தின் எல்லையில் பழங்கால யானை சுதை சிற்பம் ஒன்று உள்ளது. வெல்லம், கடுக்காய் மற்றும் சுண்ணாம்புக் கலவையால், சுட்ட செங்கற்களை கொண்டு 33 அடி நீளமும், 12 அடி அகலமும், 60 அடி உயரமும் கொண்ட அந்த யானை சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய யானை சுதை சிற்பமாக காட்சியளிக்கிறது. இந்த சுதை சிற்பத்தை தமிழக தொல்லியல் துறை புராதன சின்னமாக 2020ஆம் ஆண்டு அறிவித்துள்ளது.


