News April 8, 2024
அரியலூர்: நேருக்கு நேர் மோதி விபத்து

செந்துறை அண்ணா நகர் பகுதி பேருந்து நிலையம் அருகில் நேற்று இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபதுக்குள்ளானது. இதில் சேடக்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கால் முறிவு ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து செந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 16, 2025
அரியலூர்: பாலியல் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

அரியலூர் மாவட்டத்தில், கடந்த 2022 ஆம் ஆண்டு இராயம்புரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், தனது குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே சென்று, அந்த பெண்மணியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த வழக்கில் அரியலூர் மகளிர் நீதிமன்றம் இன்று குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
News December 16, 2025
அரியலூர்: பாலியல் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

அரியலூர் மாவட்டத்தில், கடந்த 2022 ஆம் ஆண்டு இராயம்புரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், தனது குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே சென்று, அந்த பெண்மணியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த வழக்கில் அரியலூர் மகளிர் நீதிமன்றம் இன்று குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
News December 16, 2025
அரியலூர் மாவட்ட ரோந்து பணி விவரம்

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (டிச.15) இரவு 10 மணி முதல் இன்று (டிச.16) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


