News January 9, 2025
அரியலூர் இரவு ரோந்து போலீசாரின் தொடர்பு நம்பர் வெளியீடு

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் அரியலூர் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் செந்துறை திருமானூர் மீன்சுருட்டி தா.பழூர் உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவசர உதவிக்கு போலீசாரின் கைபேசி எண் மாவட்ட காவல் அலுவலகத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News November 15, 2025
அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்

அரியலூர் மாவட்டத்தில் இன்று (நவ.14) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News November 14, 2025
அரியலூர்: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். இதனை ஷேர் பண்ணுங்க!
News November 14, 2025
அரியலூர் தொழில்நுட்ப பணிகள் II-க்கான தேர்வு

அரியலூர் மாவட்டத்தில் அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் II-க்கான தேர்வு வரும் (நவ – 16) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை மற்றும் பிற்பகல் 02.30 மணி முதல் 05.30 வரை அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரிகளில் நடைபெறுகிறது. தேர்வு எழுதவரும் தேர்வர்கள் அனைவரும் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட சரியான நேரத்தில் வர ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


