News December 15, 2025

அரியலூர்: அன்பு கரங்கள் திட்டத்தின் கீழ் மடிக்கணினி

image

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், பள்ளிக் கல்வித் துறை சார்பில், அன்பு கரங்கள் திட்டத்தின் கீழ் பெற்றோர்களை இழந்த மூன்று மாணவர்களுக்கு ஆட்சியர் ரத்தினசாமி மடிக்கணினி வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளிக்கல்வி துணை ஆய்வாளர் பழனிச்சாமி உள்ளிட்ட பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் மூன்று மாணவர்களும் மடிக்கணினி பெற்றுக் கொண்டு தங்கள் படிப்புக்கு உதவிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

Similar News

News January 25, 2026

அரியலூர்: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

அரியலூர் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

News January 25, 2026

அரியலூர்: விளையாட்டு திருவிழா இன்று தொடக்கம்

image

முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா “இது நம்ம ஆட்டம் 2026” விளையாட்டுப் போட்டிகள் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இன்று நடைபெற உள்ளது. இன்று காலை 10.15 மணியளவில், அரியலூர் ஒன்றிய அளவில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், வாலிபால், கேரம் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

News January 25, 2026

அரியலூர்: 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு

image

விக்கிரமங்கலம் அருகே முத்துவாஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மயில் ராவணன் ( 34). இவரை அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (30) என்பவர், முன்விரோதம் காரணமாக தனது நண்பர்களுடன் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், சம்பத்தில் ஈடுபட்ட சுரேஷ், சதீஷ், அஜித் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

error: Content is protected !!