News April 10, 2024
அரியலூரில் வலம் வரும் பானை சின்னம்

சிதம்பரம் மக்களவை தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். பானை சின்னத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில், வில்லியனுாரைச் சேர்ந்த துரை என்ற சிற்ப கலைஞரால் பைபர் மூலம் 7 அடி உயரம், 6 அடி அகலம் கொண்ட ஆறு மெகா சைஸ் பானைகள் உருவாக்கப்பட்டு பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
Similar News
News November 9, 2025
அரியலூர்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News November 9, 2025
அரியலூர்: தனிமையில் இருந்த இளைஞர் தற்கொலை

அரியலூர் மாவட்டம், தளவாய் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முள்ளுக்குறிச்சி வடக்குத்தெரு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (34). இவர் வீட்டில் தனியாக இருந்த போது திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
News November 9, 2025
அரியலூர்: ஆய்வு மேற்கொண்ட மாவட்ட எஸ்பி

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர்களுக்குக்கான எழுத்துத் தேர்வு இன்று (நவ.09) நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி நேற்று (நவ.08) தேர்வு நடைபெறும் மையங்களை ஆய்வு செய்தார். மேலும் பாதுகாப்பு பணிகளுக்கு செல்லும் காவல்துறையினருக்கு அறிவுரையும் வழங்கினார்.


