News August 8, 2025
அரசு மீன் பண்ணையில் மீன் குஞ்சுகள் விற்பனை கலெக்டர் அருணா தகவல்

புதுகை மாவட்டத்தில் தட்டாமலைபட்டி, கருவிடைசேரி, குருங்களூர், அரசு மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணையில், தற்பொழுது பருவமழை காரணமாக இந்திய பெருங்கெண்டை, கட்லா, ரோகு, மிர்கால், மீன் குஞ்சுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. மீன் வளர்ப்பு கண்மாய், குளங்களில் அரசு விலையில் மீன் குஞ்சுகள் வளர்க்க மீன்வள சார் ஆய்வாளர்களை 8248970355, 9751616866 தொடர்பு கொள்ள கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
Similar News
News November 13, 2025
புதுக்கோட்டை: குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

புதுக்கோட்டை நார்த்தாமலை அடுத்த பூங்குடியில் முருகேசன் என்பவர் மகன் ஹரிணேஸ்வரன் (11) பூங்குடியில் உள்ள குளத்தில் (நவ.8) அன்று மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கியதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, அவரது தந்தை அளித்த புகாரில் வெள்ளனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 13, 2025
புதுகை: சேமிப்பு கணக்கு திட்டம் தொடங்க சிறப்பு முகாம்!

புதுகை மாவட்டத்தில் நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு செல்வமகள், பொன்மகன் சேமிப்பு திட்டம் தொடங்கப்பட உள்ளது. பத்து வயதுக்குள் உட்பட்டவர்கள் தொடங்கலாம் குறைந்தபட்சம் ரூ.250 முதல் ரு.1,50,000 வரை செலுத்தலாம். ஆண்டுக்கு 8.2% வட்டி வழங்கப்படும். 80.சி பிரிவின் கீழ் வரிச்சலுகை உண்டு 21 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சி அடையும் என அஞ்சல் கோட்டை கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
News November 13, 2025
புதுகை: ஆதார் அட்டை திருத்தம் இனி ஈஸி!

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.மேலும் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <


