News August 20, 2024
அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் ஐடிஐ மாணவர் சேர்க்கை நடக்கிறது

பெரம்பலூர் அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் மாணவ – மாணவிகளுக்கான நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. பயிற்சியில் சேர விரும்புவோர் தங்கள் அசல் தகுதி சான்றிதழ் உடன் நேரில் வரவும். ஏற்கனவே பயிற்சியாளர்கள் சேர்க்கை நடைபெற்றதில் மீதமுள்ள காலியிடங்களுக்கு மட்டும் நேரடி தேர்வு நடைபெறுகிறது. காலியிடங்கள் மிக குறைவாக உள்ளதால் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 13, 2026
பெரம்பலூர் மாவட்ட MLA எண்கள்!

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் (தனி) மற்றும் குன்னம் என இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த இரண்டு சட்டமன்றத் தொகுதிகளின் உறுப்பினர்களின் தொடர்பு எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியை இங்கு அறிந்துகொள்ளலாம்.
1.பெரம்பலூர் (தனி) – எம். பிரபாகரன் – 9786660160 – mlaperambalur@tn.gov.in
2.குன்னம் – எஸ்.எஸ்.சிவசங்கர் – 9443142600 – mlakunnam@tn.gov.in
இதனை உங்களது உறவினர்களுக்கும் SHARE பண்ணுங்க…
News January 13, 2026
மாசு இல்லாத போகி பண்டிகை கொண்டாட வலியுறுத்தல்

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் போகிப் பண்டிகைக்கு முன் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. அதன்படி பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக், டயர், டியூப் போன்றவற்றை எரிக்காமல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் போகிப் பண்டிகையை கொண்டாடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.
News January 12, 2026
பெரம்பலூர் மக்களே உங்களுக்கு தெரியுமா?

கண்ணகி தன் கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டு கோபம் கொண்டு மதுரையை எரித்த பின், மன அமைதியின்றி அலைந்து கொண்டிருக்கையில் சிறுவாச்சூரில் அமைதி கொண்டாள் எனவும், கண்ணகியைக் கொண்டு மதுரையை எரியூட்டிய மதுரை காளியம்மனே இத்தலம் விரும்பி அமர்ந்தாள் எனவும் கூறப்படுகிறது. மதுரை காளியம்மன் என்ற திருப்பெயரே பின்னாட்களில் மருவி மதுரகாளியம்மனாக வந்ததாகக் கூறப்படுகிறது. SHARE பண்ணுங்க.


