News August 20, 2024
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு கலைத் திருவிழா அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் கலை திருவிழா 2024- 25 அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் 1-8 வகுப்பு மாணவர்களுக்கான கலைத் திருவிழா போட்டியில் பங்குபெறும் மாணவர்களை 19.08.2024 முதல் 21.08.2024 வரை EMIS பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். 21.08.2024 பிறகு பள்ளி அளவில் பதிவேற்றம் செய்ய இயலாது ஆகையால் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களை போட்டியில் பங்கேற்கும் மாணவர்களை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News January 15, 2026
திருவாரூர்: அரசு ஊழியர் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், திருவாரூர்மாவட்ட மக்கள் 04366-226970 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News January 15, 2026
திருவாரூர்: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு! Apply பண்ணுங்க!

திருவாரூர் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!
News January 15, 2026
திருவாரூர்: மயங்கி கிடந்த மூதாட்டி சாவு

கள்ளிக்குடியில் கிழக்கு கடற்கரை சாலையில் 65 மதிக்கதக்க மூதாட்டி மயங்கி கிடப்பதாக எடையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் மூதாட்டியை மீட்டு, திருத்துறைப்பூண்டி மருத்துவமனைக்கு அனுமதித்தனர். பின்னர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


