News May 1, 2024

அரசியல் கட்சிகளுக்கு நீர், மோர் பந்தல் திறக்க அனுமதி

image

அரசியல் கட்சியினர் சென்னையில் தண்ணீர் பந்தலை திறக்கலாம் என மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதாசாகு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியல் கட்சிகளின் கோரிக்கைக்கு இணங்க தண்ணீர் பந்தல் திறக்க ஆட்சேபனை இல்லை. இதன் மூலம் எந்தவொரு அரசியல் ரீதியான செயல்பாட்டிலும் ஈடுபடக்கூடாது. கண்டிப்பாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என கடைபிடிக்க வேண்டும் என்றார்.

Similar News

News December 12, 2025

சென்னை கர்ப்பரேஷனில் வேலை; ரூ.60,000 சம்பளம்!

image

சென்னை கர்ப்பரேஷனில் கால் நடை மருத்துவம் படித்தவருக்கு 15 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மாத சம்பளம் ரூ.60,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து, வரும் டிச.16ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க. சென்னையில் அரசு வேலை தேடுவோருக்கு உடனே ஷேர் பண்ணுங்க.

News December 12, 2025

சென்னையில் சுகாதார மீறலுக்கு அபராதம் அதிகரிப்பு!

image

சென்னையில் GCC கடந்த ஒராண்டில் 79,875 டிஜிட்டல் அபராதங்கள் 40,227 பொது சுகாதார மீறல்களுக்காக விதிக்கப்பட்டது. பிளாஸ்டிக் எரிப்பு, குப்பை கொட்டல், கழிவு பிரிப்பு தவறுதல் உள்ளிட்டவை அதிகம். கடைகள், கட்டுமானக் கழிவு கொட்டல், கொசு ஆதாரம், சட்டவிரோத வடிகால் இணைப்புகள் ஆகியவற்றிற்கு அபராதமாக மொத்தம் ரூ.9.27 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

News December 12, 2025

சென்னையில் 12 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?

image

சென்னை மாவட்டத்தில் உள்ள 40.04 லட்சம் வாக்காளர்களில், 70% பேர் மட்டுமே வாக்காளர் திருத்தப் படிவங்களை சமர்ப்பித்துள்ளனர். மீதமுள்ள 12 லட்சம் வாக்காளர்களிடமிருந்து விவரங்கள் பெறப்படாததால், அவர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். படிவம் சமர்ப்பிக்க டிசம்பர் 14 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!