News April 30, 2024
அம்மோனியா வாயு கசிந்த இடத்தில் அரசு அதிகாரிகள் ஆய்வு

கோவை, காரமடை ஒன்றியம், சிக்காரம்பாளையம் ஊராட்சி சென்னி வீரம்பாளையத்தில் உள்ள சிப்ஸ் கம்பெனியில் அம்மோனியா வாயு கசிவினால் நேற்று விபத்து ஏற்பட்டது. அதனை மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். அவர்களுடன் காரமடை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சு.சுரேந்திரன் ஆய்வு மேற்கொண்டு மேலும் அவ்வூரில் வசிக்கும் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி மதிய உணவு வழங்கினார்.
Similar News
News December 11, 2025
கோவையில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம் ▶️கோவை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0422-2200009 ▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. (ஷேர் பண்ணுங்க)
News December 11, 2025
கோவை: டிகிரி, டிப்ளமோ போதும்… DRDO-இல் வேலை!

மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி, மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ -இல் முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர், டெக்னீசியன் உள்ளிட்ட 764 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு வேலைக்கேற்ப டிகிரி, ஐடிஐ, டிப்ளமோ படித்திருந்தால் போதும். சம்பளம் வேலைக்கேற்ப ரூ.35,400 – ரூ.1,12,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.31ம் தேதிக்குள் இந்த லிங்கை <
News December 11, 2025
கோவை அருகே சோகம்: இளம்பெண் தற்கொலை!

சிறுமுகை பெரியூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(27) மீன்பிடி தொழிலாளி. இவருக்கு புவனேஸ்வரி(25) என்ற மனைவியும், 4 வயதில் மகனும் உள்ளனர். கோவிந்தராஜ் மாலை அணிந்துள்ளதால் பாட்டி வீட்டில் நேற்றிரவு உறங்கியுள்ளார். நேற்று காலை வந்தபோது, புவனேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. இதுகுறித்து சிறுமுகை போலீசார் விசாரித்து வருவதோடு, திருமணமாகி 5 ஆண்டுகளே ஆகாததால் ஆர்டிஓ விசாரணையும் நடைபெற்று வருகிறது.


