News November 14, 2025
அமைச்சருக்கு எதிரான அவதூறு வழக்கு வாபஸ்

தெலங்கானா முன்னாள் CM மகன் KTR-ஐயும், நடிகை சமந்தாவையும் இணைத்து, அம்மாநிலத்தின் தற்போதைய அமைச்சர் கொண்டா சுரேகா 2024-ல் பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, தங்களது குடும்பத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி, நடிகர் <<14263995>>நாகர்ஜூனா<<>> அவதூறு வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்நிலையில், சுரேகா பொதுவெளியில் மன்னிப்பு கோரியதை அடுத்து, நாகர்ஜுனா தற்போது வழக்கை வாபஸ் பெற்றுள்ளார்.
Similar News
News December 15, 2025
கவி பாட தூண்டும் மீனாட்சி சௌத்ரியின் கண்கள்

கருவிழி பார்வையில் காந்தம் உள்ளது போல, ரசிகர்களை கட்டி இழுக்கிறார் மீனாட்சி சௌத்ரி. விஜய்யின் பீஸ்ட் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான அவரது லேட்டஸ்ட் போட்டோ ஷூட் இளசுகளின் நெச்சைத்தில் முள்ளாய் தைக்கிறது. ஹார்டின்களை பறக்கவிட்டு நெட்டிசன்களால் கொண்டாடப்படும் போட்டோஸ் மேலே உள்ளன. நீங்களும் பார்த்து மகிழுங்கள், நண்பர்களும் பகிருங்கள்..
News December 15, 2025
ஜாக் மாவின் பொன்மொழிகள்

✪ கனவுகளின் அழகை நம்புகிறவர்களுக்கு தான் எதிர்காலம் சொந்தம் ✪ ஒரு விஷயத்தில் விடாப்பிடியாக இருந்தால் உங்களுக்கு நிச்சயம் வாய்ப்பு உண்டு ✪ உலகை மாற்ற வேண்டும் என்றால் நீங்கள் வித்தியாசமானவராக இருக்க வேண்டும் ✪ யோசனைகள் எதுவென்பது முக்கியமல்ல; அவற்றை செயல்படுத்துவதுதான் கெட்டிக்காரத்தனம் ✪ உங்களுக்கு ஒரு கனவு இருந்தால், அதைப் பிடித்துக்கொண்டு ஒருபோதும் விடக்கூடாது.
News December 15, 2025
தமிழகத்தில் பொங்கலை கொண்டாட உள்ளாரா PM மோடி

ஜனவரி 13 முதல் 15-ம் தேதி வரை 3 நாள்களுக்கு தமிழகத்தில் PM மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள அவர், ஜன.14-ம் தேதி விவசாயிகளுடன் பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழ உள்ளாராம். தொடர்ந்து 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து PM மோடி பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.


