News November 8, 2025

அமெரிக்காவே வேணாம் என கதறும் சிட்டிசன்கள்!

image

USA-ல் 18-34 வயதுடைய 65% பேர் நாட்டை விட்டு வெளியேற விருப்பப்படுவதாக American Psychological Association-ன் சர்வேயில் தெரியவந்துள்ளது. மூன்றில் ஒரு பங்கு இளைஞர்கள் நாட்டின் எதிர்காலம் குறித்து கவலைப்படுவதாகவும், 39% பேர் அரசியல் சூழல் காரணமாக வெளியேற நினைப்பதாக தெரிவித்துள்ளனர். இதற்கு பணவீக்கம், மருத்துவ செலவுகள், விலைவாசி, வேலையின்மை, தனிமை ஆகியவையே காரணம் என கூறப்பட்டுள்ளது.

Similar News

News December 6, 2025

12 மாவட்டங்களில் மழை வெளுத்து கட்டும்

image

அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 7 மணி வரை) தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கோவை, திருப்பூர், தென்காசி, நெல்லை, தேனி, கன்னியாகுமரியில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளியே செல்லும் போது குடையை மறக்காதீங்க. கவனமாக இருங்க மக்களே..

News December 6, 2025

டிசம்பர் 6: வரலாற்றில் இன்று

image

*1877–தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் முதலாவது இதழ் வெளியானது *1892–சுதந்திர போராட்ட வீராங்கனை ருக்மிணி லட்சுமிபதி பிறந்தநாள் *1935–நடிகை சாவித்திரி பிறந்தநாள் *1956–அம்பேத்கர் நினைவு நாள் *1971–வங்கதேசத்தை அங்கீகரித்த காரணத்தினால் இந்தியா உடனான தூதரக உறவுகளை பாகிஸ்தான் துண்டித்தது *1988–ரவீந்திர ஜடேஜா பிறந்தநாள் *1992–பாபர் மசூதி இடிக்கப்பட்டதால் நடந்த கலவரங்களில் 1,500 பேர் உயிரிழப்பு

News December 6, 2025

மக்களிடம் பிளவை உண்டாக்க முயற்சி: செல்வப்பெருந்தகை

image

திருப்பரங்குன்றத்தில் கலவரத்தை ஏற்படுத்தவும், மத நல்லிணக்கத்தை சீரழிக்கவும் ஒரு கும்பல் முயற்சிப்பதாக செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டியுள்ளார். அங்கு மகிழ்ச்சியாக வாழும் மக்களிடையே பிளவை ஏற்படுத்த பாஜக, RSS, இந்து முன்னணி சேர்ந்து வேலை செய்வதாக அவர் சாடியுள்ளார். மற்ற ஆறுபடை வீடுகளில் தீபம் ஏற்றாதவர்கள், எதற்காக திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற முயற்சிக்கிறார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!