News July 10, 2024
அப்ரண்டிஸ் பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு

நாமக்கல் மாவட்ட அளவில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் (அப்ரண்டிஸ்) சேர்க்கை முகாம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், நாமக்கல் வளாகத்தில் வரும் 15ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை நடைபெற உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு தொலைபேசி 04286-290297, 79041 11101, 90802 42036ல் தொடர்புகொண்டு அறிந்து கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார்.
Similar News
News July 11, 2025
நாமக்கல்: குரூப்-4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு!

➡️ நாமக்கல் மாவட்டத்தில் நாளை 36,436 பேர் குரூப்-4 தேர்வு எழுத உள்ளனர்.
➡️ தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
➡️ ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
➡️ BLACK INK BALL POINT பேனாவுக்கு மட்டுமே அனுமதி.
➡️ காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
➡️ வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை.
இதை தேர்வு எழுதும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News July 11, 2025
ஆன்லைன் மோசடி – முதலில் என்ன செய்ய வேண்டும்?

நாமக்கல் மாவட்டத்தில் இணையவழி மோசடிகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கடந்த ஆண்டு 1907 சைபர் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, நீங்கள் இணைய மோசடிக்கு ஆளாகியுள்ளீர்கள் என்பதை உணர்ந்தவுடன், உடனடியாக உங்கள் வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டு, வங்கிக் கணக்கை பிளாக் செய்யுமாறு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க 1930 அழைக்கலாம். மக்களே SHARE பண்ணுங்க!
News July 11, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

நாமக்கல், பழனி வழியாக தினசரி இயங்கும் 22651 சென்னை சென்ட்ரல் – பாலக்காடு அதிவிரைவு ரயில், இன்று (11.07.2025) முதல் 15 நிமிடங்கள் முன்னதாக பாலக்காடு சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இனி சென்னையில் இரவு 9:40 மணிக்கு புறப்படும் ரயில் திருவள்ளூர், ஜோலார்பேட்டை, சேலம், இராசிபுரம் வழியாக அதிகாலை 3:34 மணிக்கு நாமக்கல் வந்து அதிகாலை 3:35 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. SHARE பண்ணுங்க!