News March 25, 2024
அதிமுக வேட்பாளர் வேட்பு மனுதாக்கல்

அ.தி.மு.க.வின் 33 வேட்பாளர்களும் இன்று மதியம் 12 மணிக்கு அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலகத்துக்கு சென்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். அந்த வகையில் அ.தி.மு.க. வேட்பாளர்களான தென்சென்னை ஜெயவர்தன், வடசென்னை ராயபுரம் மனோ, காஞ்சிபுரம் (தனி) தொகுதியில் பெரும்பாக்கம் ராஜசேகர், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பிரேம்குமார் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
Similar News
News November 8, 2025
FLASH: ரிப்பன் மாளிகையில் போலீஸ் குவிப்பு!

சென்னை, தூய்மை பணியாளர்கள் இன்று 100-வது நாள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். காலை 10.30 மணிக்கு பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரிப்பன் மாளிகையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ரிப்பன் மாளிகையில் குவிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் தவிர்க்கவே போலீஸ் பாதுகாப்பு என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
News November 8, 2025
சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு!

சென்னை, SIR குறித்த சந்தேகங்களுக்கு வாக்காளர்கள் விளக்கம் பெற சென்னை மாநகராட்சி தொடர்பு எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, பெரம்பூர்-9445190204, கொளத்தூர்-9445190206, வில்லிவாக்கம்-9445190208, எழும்பூர்-9445190206, இராயபுரம்-7867070540, துறைமுகம்-8778381704, அண்ணா நகர் -9445190208, சேப்பாக்கம்-9445190209, சைதாப்பேட்டை-9445190213 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
News November 8, 2025
EDII-ன் AI செயலி உருவாக்கும் பயிற்சி: நவ. 11 முதல்

கிண்டியில் உள்ள அரசு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII), மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நவம்பர் 11 முதல் AI மூலம் செயலிகளை உருவாக்கும் பயிற்சியை வழங்கப்பட உள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பங்கேற்கலாம். சாட்ஜிபிடி, ஜெமினி போன்றவற்றை கொண்டு AI செயலிகள், இணையதளங்களை உருவாக்க இதில் கற்றுத்தரப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


