News July 15, 2024

அண்ணாமலையார் தரிசனத்துக்கு காத்திருந்த பக்தர்கள்

image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, வார விடுமுறை நாட்களில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநில பக்தர்கள் வருகை தருவர். இரண்டு நாள் தொடர் அரசு விடுமுறை என்பதால் ஞாயிற்றுக்கிழமையான நேற்று, திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் பக்தர்கள் 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். கூட்டத்தை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

Similar News

News July 10, 2025

ரோந்து பணி காவலர்களின் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.

News July 10, 2025

குரூப் 4 தேர்வுக்கு 48,323 பேர் விண்ணப்பம்

image

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருகிற 12ம் தேதி நடைபெற உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தின் குரூப் 4 தேர்வை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் குரூப் 4 தேர்வுக்கு 48 ஆயிரத்து 323 பேர் விண்ணப்பித்து உள்ளனர் என்று கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

News July 9, 2025

கடன் தொல்லை நீக்கும் கால பைரவர்

image

திருவண்ணாமலை கோவிலின் பிரம்ம தீர்த்தக்கரை அருகே கால பைரவர் சன்னதி உள்ளது. இங்குள்ள பைரவர் ஒரே கல்லால் 8 கரங்களுடன் செதுக்கப்பட்டுள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக, இங்கு பைரவர் வீற்றிருக்கிறார். இங்கு அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்குமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!