News November 29, 2024
ஃபெஞ்சல் புயல்- விழுப்புரத்திற்கு ‘ரெட் அலர்ட்’

விழுப்புரத்திற்கு நாளை ( நவ.30) அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு ஃபெஞ்சல் என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இது சென்னையில் இருந்து 300 கி.மீ தொலைவில் உள்ளதாகவும், நாளை பிற்பகல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 12, 2025
விழுப்புரம்: சொத்துக்காக தந்தையைக் கொன்ற மகள்!

புதுச்சேரி மாநிலம் திருபுவனை பகுதியைச் சேர்ந்தவர் கலிவரதன்(73). இவர் கடந்த நவ.9ஆம் தேதி வானூர் தாலுகா, விநாயகபுரம் சுடுகாடு அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது மனைவி ருக்மணி வானூர் போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, விசாரணையில் சொத்துக்காக வளர்ப்பு மகள் லதா, அவரது கணவர் சக்திவேல் ஆகியோர் இணைந்து சொத்திற்காக கொலை செய்தது தெரியவந்ததும் அவர்களை கைது செய்தனர்.
News November 12, 2025
விழுப்புரம்: சர்க்கரை நோய் இருக்கா? இலவச முகாம்!

திண்டிவனம் வட்டத்திற்குட்பட்ட உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு இன்று(நவ.12) உழவர் சந்தை வளாகத்தில் சர்க்கரை நோய் இலவச பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. இன்று காலை 8.30 மணி வரை இந்த இலவச பரிசோதனை முகாம் நடைபெறும். இதில், சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கலந்துகொண்டு பயனடையலாம்.
News November 12, 2025
இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம் செயல்பாடு

விழுப்புரம் போலீசாரின் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்


